Wednesday, July 31, 2019

குப்பைத்தொட்டி தாயம்மா...

உதிரம் சிந்தி பெற்றவளோ
உன்னில் தூக்கி எறிந்தாள் என்னை குப்பையாய் 
ஊரை தூய்மையாக்கிட உன்னை அசுத்தமாக்கி கொண்டவளே
கருவறை இல்லா தாய் நீ
உயிரில்லா உறவு நீ

நான் தூங்க  மடி தந்த தாயம்மா நீ..






Thursday, July 4, 2019

உயிரடா நீ எனக்கு

என் கண்கள் உன்னை காணும் போதெல்லாம்
 ஆனந்த கூத்தாடுகிறது என்னுள் மழலை
  தன்
 தேடுவது போல்
உன்னையே தேடுகிறது எனதுள்ளம்
அப்பழுக்கற்ற என் பாசத்திற்கு உவமை
சொல்ல ஒன்றுமில்லை இவ்வுலகில்
அத்தனையும் சத்தியமடா
உயிரடா நீ எனக்கு...

Wednesday, July 3, 2019

வானம் வசப்படும்

சொந்தங்கள் வருத்திட
சோகங்கள் துரத்திட
சோர்ந்து விடவில்லை நான்
தன்னம்பிக்கை உளி கொண்டு
தடைகளை தகர்தெறிகின்றேன்
ஒருநாள் வானம் வசப்படும்
வானவிலும் மாலையாகும் ...

Tuesday, July 2, 2019

வன்கொடுமை

நாடு தாண்டி காடு சென்று வாழ்ந்திட
துடிக்கிறது என் மனம் ,எத்தனையாயிரம்
ஆறுதல் கூறினும் ஏற்க மறுக்கிறது
பெண் குழந்தை பிறந்தால் வரதட்சனை கொடுமை
என்பது மாறி பூமியில் வாழ்வதே கடுமை என்றானது
கண்ணகியாய் வெகுண்டெழுந்து கயவர்களை
சாம்பலாக்கிட துடிக்கிறது நெஞ்சம்
நாட்டில் உடனிருந்து சிரித்துக் கொண்டே
நமக்கு நஞ்சூட்டும் மக்களை விட மாக்களே சிறந்தது...

மதியே வந்திடுவாய் ...

                   மதியே வந்திடுவாய் என் சோகம் தீர்த்திடுவாய் மருத்துவமனை பல சென்று மருந்துகள் பல தின்று நாட்காட்டியை தோழியாக்கி...