Sunday, August 4, 2019

வீரத்தாலாட்டு

காலைக் கதிரே,கண்ணுறங்கு என் உயிரே


இரவு மதியே, நீ  உறங்கு இமை மூடி

பெண்பிள்ளை உனக்குத் தான் வீரமூட்ட நான் இருக்கேன்

பூச்சாண்டி வந்தாலும் பயமில்லை நீ உறங்கு

பூதமது வந்தாலும் துரத்திடலாம்,பூந்தேனே  நீ உறங்கு

பாதகனைக் கண்டால் நையப்புடைத்திடலாம், நன்றாக நீஉறங்கு

ஆபத்து வந்திட்டா அழுது புலம்பாம  அடுத்தவரை நாடாம

அடித்து நொறுக்கம்மா உனை நீ காத்துக்கொள்ளம்மா

சட்டம் மதித்து நடந்திடம்மா,  சத்தியத்திற்கு தலைகுணிந்திடம்மா

உன்னை காக்க நீ இருக்க கவலையில்லை நீ உறங்கு......

கருவே நீ கலைந்ததேனோ.....

வாடாமல்லியே என் கருவில் வாடி நீ போனதேனோ

என் உயிரில் பூத்திட்ட முதல் பூவே

எங்க நீ இருக்க சேதி ஒன்னு அனுப்பி வையி 

உன் தாயி நானுமிங்கே உனக்காக காத்து நிக்கேன்

உன் கூட நானும் வாரேன் என்னை கொஞ்சம் கூட்டி போயேன்.....




Friday, August 2, 2019

டாஸ்மாக் (tasmac)



மதுவை அவன் குடிச்சி


மாது என்னை அவனடிச்சு

குடும்பத்தை குலைத்திட்டான்

இன்னல் பல கொடுத்திட்டான்

அவன் குடிக்க பணம் தேடி

பிறர்மனை புகுந்திட்டான்

குடி உன் குடியையும் ஊரான் குடியையும்

கெடுக்கும் என்றெழுதுங்கள் மதுபாட்டில்களில்

இது ஓருவன் குடிப்பதை மற்றவன் தடுக்க வகைசெய்யும்

முதல்வரே எனக்கு மூத்தவரே

பாரை கொஞ்சம் மூடுமய்யா

தங்கச்சி  இவள் தாலிக்கு

வேலி கொஞ்சம் போடுமய்யா.....

அன்னை







நித்தம்  என் நித்திரையில்

நீ தான்  என் சொப்பனத்தில்

அம்மா என்றிடுவாய் 

அணைத்து நீ முத்தமிடுவாய்

அமுதே துள்ளி வந்திடுவாய், 

துளிர்த்திடுவாய் என்கருவில்

        என் உயிரை உணவாக்கி ஊட்டி விட காத்திருக்கேன்

    உன் விழிநோக்க உசுரோட உனக்காக நான் இருக்கேன்... .

Thursday, August 1, 2019

மதியே வந்திடுவாய் ...

                   மதியே வந்திடுவாய்


என் சோகம் தீர்த்திடுவாய்

மருத்துவமனை பல சென்று

மருந்துகள் பல தின்று

நாட்காட்டியை தோழியாக்கி

உன் வருகைக்காக காத்திருக்கிறேன் 

மெழுகாய் உருகி

வருடம் இரண்டாச்சு வராமல் போனதேன்  

என் உயிரே வரமாய் வந்திடுவாய் 

என் உயிர் காத்திடுவாய் என் கருவறை தோட்டத்திலே 

மலராய் மலர்ந்திடுவாய் ....

உன் அன்னை நான் இங்கே உனக்காக ஏங்கி 

நிக்கேன்.......

Wednesday, July 31, 2019

குப்பைத்தொட்டி தாயம்மா...

உதிரம் சிந்தி பெற்றவளோ
உன்னில் தூக்கி எறிந்தாள் என்னை குப்பையாய் 
ஊரை தூய்மையாக்கிட உன்னை அசுத்தமாக்கி கொண்டவளே
கருவறை இல்லா தாய் நீ
உயிரில்லா உறவு நீ

நான் தூங்க  மடி தந்த தாயம்மா நீ..






Thursday, July 4, 2019

உயிரடா நீ எனக்கு

என் கண்கள் உன்னை காணும் போதெல்லாம்
 ஆனந்த கூத்தாடுகிறது என்னுள் மழலை
  தன்
 தேடுவது போல்
உன்னையே தேடுகிறது எனதுள்ளம்
அப்பழுக்கற்ற என் பாசத்திற்கு உவமை
சொல்ல ஒன்றுமில்லை இவ்வுலகில்
அத்தனையும் சத்தியமடா
உயிரடா நீ எனக்கு...

மதியே வந்திடுவாய் ...

                   மதியே வந்திடுவாய் என் சோகம் தீர்த்திடுவாய் மருத்துவமனை பல சென்று மருந்துகள் பல தின்று நாட்காட்டியை தோழியாக்கி...