தட்டித்தடுமாறும் முதிர்கிழவியானேன்
இன்றும் பாப்பா என்கிறான் பாசத்தினால்
முதிர் கிழவியாயினும் நானே அவன் கண்களுக்கு பேரழகி
இளமைபருவத்தில் ஓடி ஒளிந்து விளையாடினோம்
இன்றோ என்னால் ஓட முடியவில்லை குழந்தையாகி
தவழ்ந்து சென்று ஒளிந்து கொள்கின்றேன் அவன்
பாசப்பிடியிலிருந்து தப்பித்து கொள்ள...
கம்பனும் புதிதாய் பிறந்து எங்களின் காதல் கவி
பாட ஆசை கொள்வான்......
பிக்காசோவும் அடம்பிடிப்பான் எங்களின்
காதலை ஓவியமாக்கிட.....
ஷேக்ஸ்பியரும் எங்கள் காதல் கதை எழுத
ஆர்வம் கொண்டிடுவான்....






