Sunday, August 4, 2019

வீரத்தாலாட்டு

காலைக் கதிரே,கண்ணுறங்கு என் உயிரே


இரவு மதியே, நீ  உறங்கு இமை மூடி

பெண்பிள்ளை உனக்குத் தான் வீரமூட்ட நான் இருக்கேன்

பூச்சாண்டி வந்தாலும் பயமில்லை நீ உறங்கு

பூதமது வந்தாலும் துரத்திடலாம்,பூந்தேனே  நீ உறங்கு

பாதகனைக் கண்டால் நையப்புடைத்திடலாம், நன்றாக நீஉறங்கு

ஆபத்து வந்திட்டா அழுது புலம்பாம  அடுத்தவரை நாடாம

அடித்து நொறுக்கம்மா உனை நீ காத்துக்கொள்ளம்மா

சட்டம் மதித்து நடந்திடம்மா,  சத்தியத்திற்கு தலைகுணிந்திடம்மா

உன்னை காக்க நீ இருக்க கவலையில்லை நீ உறங்கு......

6 comments:

  1. ஆகா அருமை ... தாலாட்டை கேட்டுகிட்டே குழந்தை உறங்கிடுச்சு தேங்க்ஸ்...
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete

மதியே வந்திடுவாய் ...

                   மதியே வந்திடுவாய் என் சோகம் தீர்த்திடுவாய் மருத்துவமனை பல சென்று மருந்துகள் பல தின்று நாட்காட்டியை தோழியாக்கி...