காலைக் கதிரே,கண்ணுறங்கு என் உயிரே
இரவு மதியே, நீ உறங்கு இமை மூடி
பெண்பிள்ளை உனக்குத் தான் வீரமூட்ட நான் இருக்கேன்
பூச்சாண்டி வந்தாலும் பயமில்லை நீ உறங்கு
பூதமது வந்தாலும் துரத்திடலாம்,பூந்தேனே நீ உறங்கு
பாதகனைக் கண்டால் நையப்புடைத்திடலாம், நன்றாக நீஉறங்கு
ஆபத்து வந்திட்டா அழுது புலம்பாம அடுத்தவரை நாடாம
அடித்து நொறுக்கம்மா உனை நீ காத்துக்கொள்ளம்மா
சட்டம் மதித்து நடந்திடம்மா, சத்தியத்திற்கு தலைகுணிந்திடம்மா
உன்னை காக்க நீ இருக்க கவலையில்லை நீ உறங்கு......